For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. புதுச்சேரி அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க முடிவு செய்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

புதுச்சேரி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க முடிவு செய்து இருக்கிறது.

தற்போது காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை உச்சத்தை அடைந்து இருக்கிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் கேட்டு குரல் கொடுத்து களத்தில் இறங்கி உள்ளனர்.

Will file court defamation case against Central government says Puducherry government

மத்திய பாஜக அரசு கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு இன்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கிறது. அதேசமயத்தில் இது குறித்து விவாதிக்க இன்று புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க முடிவு செய்து இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போவதாக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் பேட்டி அளித்து இருக்கிறார். ஆளுநர் கிரண் பேடி அனுமதி தந்தாலும் தராவிட்டாலும் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்று அவர் பேட்டி அளித்துள்ளார்.

English summary
Will file court defamation case against Central government says Puducherry government on Cauvery Management Board issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X