தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் பின்னணியில் மோடி இருந்திருக்கக்கூடாது- திருநாவுக்கரசர்
தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பின் பின்னணியில் மோடி இருந்திருக்கக்கூடாது என பிரார்த்தனை செய்வதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை : 18 எம் எல் ஏ.,க்கள் தகுதிநீக்க வழக்கின் பின்னணியில் மோடி இருந்திருக்ககூடாதென தான் பிரார்த்திப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம் எல் ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு மாதிரியான தீர்ப்புகள் வழங்கி இருப்பதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி இருக்கும் எம் எல் ஏ.,கள் தகுதிநீக்க வழக்கு குறித்து நான் விமர்சிக்கவில்லை.
ஆனால், 3வது நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ள நிலையில்,இந்த தீர்ப்பின் பின்னணியில் மோடி இருந்திருக்கக்கூடாது என நான் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.