For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏற்பாடுகள் தீவிரமாகிறதே.. இன்னும் சில நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரி எதிர்க்கட்சிகள் ஆளுநருக்கு நெருக்கடி கொடுத்துவரும் சூழ்நிலையில், தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் இன்று தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Will the Governor order for a floor test very soon?

இந்த நிலையில், சட்டசபையை கூட்டி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநர் இன்று சென்னை வரும் நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்துள்ளனர்.

இன்று ஆளுநர் வந்ததும், எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் சபாநாயகர் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளார்.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 20ம் தேதிவரை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், 20க்கு பிறகு ஒருநாளில் சட்டசபையை கூட்ட ஆளுநர் உத்தரவிட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிகிறது.

English summary
Will the Governor order for a floor test very soon as 18 MLAs disqualified by the Speaker.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X