நாளை அல்லது நாளை மறுநாள் அந்த அறிவிப்பு வருகிறது.. ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் பேட்டியளித்தார். அப்போது, இரு அணிகள் நடுவேயான பேச்சுவார்த்தை சுமூகமாக செல்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஓ.பி.எஸ் மேலும் கூறியதாவது:
இரு அணிகள் நடுவே இணைப்பு பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும் என்றார்.
எடப்பாடி அரசு மீது ஊழல் புகார் கூறிவந்த நீங்கள், இணைப்பு பேச்சுவார்த்தை நடத்துவது எப்படி? என்ற நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ், பேச்சுவார்த்தை முடிந்த பிறகு நாங்கள் தரும் அறிக்கையில் எல்லா விஷயங்கள் குறித்தும் விவரமாக தகவல் தருவோம் என்றார்.
மேலும், நான் ஏற்கனவே கூறியபடி, எங்கள் தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த நிபந்தனையும் இல்லை என்று கூறிய அவர், எங்களால் ஆட்சி ஒருபோதும் கவிழாது என ஏற்கனவே உறுதியளித்திருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.