For Daily Alerts
Just In
குடும்பத் தகராறு...3 பெண் குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்துத் தற்கொலை
மதுராந்தகம் அருகே குடும்பத் தகராறில் 3 பெண் குழந்தைகளுடன் பெண் ஒருவர் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
மதுராந்தகம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே குடும்பத் தகராறில் ஒரு பெண் தனது 3 பெண் குழந்தைகளை கிணற்றில் தூக்கி வீசி விட்டு தானும் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தவர் மங்கலலட்சுமி. இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மங்கலலட்சுமிக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்தார் மங்கலலட்சுமி.
இதையடுத்து தனது 3 குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு அங்குள்ள கிணற்றில் குதித்து விட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மூவரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போய் விட்டனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
family problem woman suicide madhya pradesh குடும்பத் தகராறு பெண் தற்கொலை மதுராந்தகம் காஞ்சிபுரம் மாவட்டம்
English summary
A Woman committed suicide with her 3 kids near Mathuranthagam in Kanchipuram district. All the 3 kids are girls.
Story first published: Sunday, December 25, 2016, 14:48 [IST]