For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடிகார கணவர்.. விடிய விடிய சண்டை.. அம்மிக் கல்லைத் தலையில் போட்டு கொன்ற மனைவி!

Google Oneindia Tamil News

Recommended Video

    குடிகார கணவர் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொன்ற மனைவி-வீடியோ

    காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவரின் தொல்லை தாங்க முடியாமல் மனைவி, கணவர் தலையில் அம்மிக் கல்லைப் போட்டுக் கொலை செய்தார்.

    காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி.

    Woman murders her husband in Kanchipuram

    திருமுருகன் - சுந்தரி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமுருகன் குடிப்பழக்கம் உடையவர். தினசரி குடிப்பார். வேலைக்கும் சரியாக போவதில்லை. வேலைக்கு செல்லாமல், குடித்துவிட்டு, மனைவி சுந்தரியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

    நேற்று அதிகாலை குடிபோதையில் சுந்தரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த சுந்தரி வீட்டிலிருந்த அம்மி கல்லை கணவரின் தலையில் போட்டு உள்ளார்.

    தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த திருமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காஞ்சிபுரம் தாலுகா போலீசார், சுந்தரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    A Woman murdered her husband for clashing with her after coming from booze in Kanchipuram. Police have arrested her.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X