கள்ளக்காதலுக்கு இடைஞ்சல்.. கணவனை போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போட்ட பெண் உட்பட மூவர் கைது
திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு அந்த பெண்ணின் கணவரை கொலை செய்ய திட்டமிட்ட ஆயுதப்படை காவலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
தேனி: கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருக்கும் கணவனை கொலை செய்ய வேண்டும் என்று காதலனுடன் சேர்ந்து திட்டமிட்ட பெண்ணையும் அதற்கு உடந்தையாக இருந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமி, 36, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த போது அனுமந்தன்பட்டியை சேர்ந்த சுகந்தி மீது காதல் ஏற்படவே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கு சாட்சியாக 13 வயதில் சஞ்சய் என்ற மகன் இருக்கிறான்.
சொந்த ஊர் திரும்பிய இந்த தம்பதியினர் கம்பத்தில் கிராமச்சாவடி தெருவில் விளையாட்டு வீரர்களுக்கான ஆடை விற்பனை செய்யும் கடை வைத்தனர்.
தகாத உறவு
வாழ்க்கை சந்தோஷமாக போன நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் வடிவில் சாமி வாழ்க்கையில் புயல் வீசியது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வந்த சுதாகருக்கும், சாமியின் மனைவி சுகந்திக்கும் தகாத உறவு ஏற்பட்டது.
கணவன் கண்டிப்பு
இது சாமிக்கு தெரியவரவே அதிர்ச்சியடைந்தார். மனைவியை கண்டித்தும் சுகந்தி திருந்த வில்லை. சாமியை கொலை செய்த சுதாகருடன் சேர்ந்து திட்டம் போட்டார். கணவன் மனைவி சண்டை அதிகரிக்கவே, வீட்டைவிட்டு சுகந்தி வெளியேறினார்.
போலீசில் புகார்
கடந்த 18ஆம் தேதி சாமி, தனது கடையில் வைத்து மனைவி சுகந்தியின் செல்போனை ஆய்வு செய்தார். அப்போது சுகந்தியும், காவலர் சுதாகரும் கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இருவர் பேசிய ஆடியோ பதிவாகியிருந்தது. இது குறித்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் சாமி புகார் அளித்ததோடு ஆதாரத்தையும் ஒப்படைத்தார்.
3 பேர் கைது
சுகந்தியை தேடி வந்த போலீசார் உத்தமபாளையம் அருகேயுள்ள ஆனைமலையான்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சுகந்தியை கைது செய்தனர். ஆயுதப்படை காவலர் சுதாகர் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கூடலூர் எல்லை தெருவை சேர்ந்த பாண்டியராஜன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
15 ஆண்டுகால குடும்ப வாழ்க்கை
சாமியை காதல் திருமணம் செய்து கொண்ட சுகந்தி அவருடன் 15 ஆண்டுகளாக வாழ்ந்துள்ளார். சுதாகருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பில், காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.