13 கிலோ தங்கம்.. துபாயிலிருந்து துப்பட்டாவில் அசால்ட்டாக கடத்தி வந்த பெண்.. சென்னையில் கைது!
துபாயிலிருந்து பெண் ஒருவர் தனது துப்பாட்டாவில் தங்கம் கடத்திக் கொண்டு சென்னை வந்துள்ளார்.
சென்னை: துபாயிலிருந்து பெண் ஒருவர் தனது துப்பாட்டாவில் தங்கம் கடத்திக் கொண்டு சென்னை வந்துள்ளார்.
துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில்தான் இந்த தங்கத்தை கடத்தி வந்துள்ளார் அந்த பெண். கர்நாடகாவை சேர்ந்த பத்மா அம்பேல் வெங்கட்ராமையா என்ற அந்த பெண், தன்னுடைய துப்பட்டாவில் தங்கத்தை கடத்தி வந்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில், தங்கத்தை எடுத்து வரும் போது, வேகவேகமாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து தம்பிக்கு முயன்று இருக்கிறார். இவரை பார்த்ததும் சந்தேகப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தனியாக அழைத்து சென்று விசாரித்து இருக்கிறார்கள்.
அதில் மாற்றி மாற்றி பதில் சொல்லி இருக்கிறார். இதனால் அவரை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அவர் இடுப்பில் சுற்றி இருந்த துப்பட்டாவில் தங்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. மொத்தம் 13 கிலோ தங்கம் அதில் இருந்துள்ளது.
இதன் மதிப்பு 4 கோடி வரை இருக்கும். இந்த பெண்ணிற்கு பின் பெரிய குழுவே இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அந்த பெண் சுங்கத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.