மானிய விலை ஸ்கூட்டியை வாங்க ஆர்வம்.. லைசென்ஸ் எடுக்க ஆர்டிஓ அலுவலகங்களில் குவியும் பெண்கள்!
மானிய விலையில் ஸ்கூட்டி வாங்குவதற்காக பெண்கள் லைசென்ஸ் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னை: மானிய விலையில் ஸ்கூட்டி வாங்குவதற்காக பெண்கள் லைசென்ஸ் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழக அரசு பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த மானிய விலை ஸ்கூட்டிகளை பெற தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மானிய விலையில் ஸ்கூட்டி பெற விரும்பும் பெண்கள் ஓட்டுநர் உரிமம் எனும் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
அதேபோல் மானிய ஸ்கூட்டி பெற விண்ணப்பிப்பவர்கள் ஆதார் எண்ணையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் மானிய விலையில் ஸ்கூட்டியை பெறுவதற்காக லைசென்ஸ் இல்லாத பெண்கள் லைசென்ஸ் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் காலை 8 மணிக்கே பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. வரிசையில் நின்று அவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகிறார்கள்.