For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 கணவர்கள்.. மாறி மாறி சண்டை.. கோபத்தில் பெற்ற குழந்தையை கொன்ற தாய்!

3 வயது குழந்தையை கொன்று தற்கொலைக்கு தாய் முயன்றுள்ளார்.

Google Oneindia Tamil News

குளித்தலை: கள்ளக்காதல் பண்ணி தொலைக்கிறவங்க எல்லாம் குழந்தைகளையே சாகடிச்சிட்டு வருவது யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை. தற்போதுகூட கரூர் மாவட்டத்தில் ஒரு தாய், தன் குழந்தையை இப்படித்தான் கொலை செய்துள்ளார்.

குளித்தலையை சேர்ந்த தம்பதி தங்கதுரை - ரம்யா. இருவருமே கூலி வேலை செய்பவர்கள்தான். இவங்களுக்கு கல்யாணம் ஆகி 4 வருடங்கள் ஆனாலும், எப்பவுமே பிரச்சனை குடும்பத்தில் தாண்டவமாடி கொண்டே வந்தது.

இதற்கு காரணம், பக்கத்து வீட்டில் வசித்து வந்த மணிமாறனை ரம்யா விரும்பியதுதான். இதில் இருவரும் நெருக்கமாகவே கர்ப்பமுமாகி ஒரு பெண் குழந்தையும் பிறந்துவிட்டது.

மணிமாறன்

மணிமாறன்

எந்த கணவனால் இதை பொறுத்து கொள்ள முடியும்? அதனால்தான் பிரச்சனை வெடித்தது. நித்தம் சண்டையும் தகராறுமாகத்தான் போனது. கடைசியில் ரம்யா குழந்தையை தூக்கி கொண்டு மணிமாறனுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டார்.

2-வது புருஷன்

2-வது புருஷன்

ஆனால் அப்போதும் ரம்யாவுக்கு நிம்மதி இல்லை. இப்போது பெண் குழந்தை வேதவர்ஷினிக்கு வயது 3. அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் இந்த குழந்தை எனக்கு பிறந்ததில்லை.. உனக்கு நான் 2-வது புருஷன்தானே, இன்னமும் நீ நிறைய பேரை கல்யாணம் பண்ணிப்பே" என்றெல்லாம் பேசி ரம்யாவுடன் சண்டை போட்டே வந்துள்ளார்.

மனசு வரவில்லை

மனசு வரவில்லை

2-வது புருஷனுக்கு முதல் புருஷனே பரவாயில்லை என்று நினைத்து, மனம் திருந்தி திரும்பவும் கணவனிடம் சென்றிருக்கிறார். தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால் தம்பிதுரையோ, குழந்தையுடன் நின்ற ரம்யாவை ஏற்க மனசில்லாமல் அதற்கு ஒத்து கொள்ளவே இல்லை.

காலால் மிதித்தார்

காலால் மிதித்தார்

இதனால் ஏற்கனவே மனம் நொடிந்து கொண்ட ரம்யாவுக்கு குழந்தைமேல் கோபம் வந்துள்ளது. இந்நிலையில்தான் நேற்று தன் அம்மா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை பூட்டிக்கொண்டு தன் குழந்தையை காலால் மிதித்தும் கயிற்றால் இறுக்கியும் கொன்றிருக்கிறார். மேலும் மண்ணெண்ணெயை குடித்து தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார்.

குழந்தையின் சடலம்

குழந்தையின் சடலம்

ஆனால் அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரம்யாவை காப்பாற்றி குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த தகவல் குளித்தலை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் விரைந்து வந்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையை பெற்ற தாயே இறுக்கி கொன்றதை மட்டும் இன்னும் யாராலுமே ஜீரணிக்க முடியவில்லை.

English summary
Near Kullithalai Young Mother killed 3 year old child because of illegal affair
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X