குடியிருப்புகளுக்கு மத்தியில் கேஸ் குடோன்... எதிர்க்கும் பெண்கள் குழு: வீடியோ
வேலூர் காட்பாடியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கேஸ் குடோன் கட்டப்படுவதை எதிர்த்து பெண்கள் ஒன்றிணைந்து போராடினர். கேஸ் குடோனால் ஆபத்து விளைந்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பொதுமக்கள் அச்சம்
வேலூர்: காட்பாடி அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் கேஸ் குடோன் கட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்கள் ஒன்றிணைந்து போராடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு மத்தியில், பஞ்சமி நிலத்தில் ஒரு குடோன் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் அது சிமெண்ட் குடோன் என்று கூறப்பட்டது.
ஆனால், தற்போது குடோன் கட்டி முடிக்கப்படும் உள்ள நிலையில், அது கேஸ் சிலிண்டர்கள் வைக்கும் குடோன் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் ஒன்றிணைந்து கேஸ் குடோன் அங்கு அமைக்கக் கூடாது என கூறி போராட்டம் நடத்தினர்.
கேஸ் குடோனால் ஏதாவது பாதிப்போ, அசம்பாவிதமோ ஏற்பட்டால் அருகில் குடியிருக்கும் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் பெண்கள் கேஸ் குடோன் அங்கு வரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து போராடுகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.