For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம்பூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாப பலி

ஆம்பூரை அடுத்த சோலூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பாலாஜி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

வேலூர்: ஆம்பூர் அருகே உள்ள தோல் தொழிற்சாலையில் கழிவு நீர் தொட்டியில் இறங்கி வேலை செய்த போது விஷவாயு தாக்கியதில் அங்கு பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள சோளூரில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. புதன்கிழமை மாலை இங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிலாளி பாலாஜி என்பவர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டிக்கு இறங்கியுள்ளார். அப்போது விஷவாயு தாக்கியது.

 worker died after attacked poisonous gas

விஷவாயுவை சுவாசித்த பாலாஜி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை வெளியில் தூக்கினர். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.. இச்சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

English summary
worker died after attacked poisonous gas in ambur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X