தடியடியும், துப்பாக்கித் தோட்டாவும்.. எழுத்தாளர் ராஜேஷ் குமார் வேதனை
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் வேதனை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை துப்பாக்கிச் சூட்டால் முறித்துப் போட்ட காவல்துறையின் செயல்பாடுகள் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அத்தனை பேரும் இன்று வேதனையை அனுபவித்துள்ளனர்.
பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமாரும் தனது வேதனையை முகநூலில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவு:
மனதில் வலி.
டாஸ்மாக் வேண்டாம் என்று சொன்னால் தடியடி.
நச்சு ஆலை எதற்கு என்று கேட்டால் துப்பாக்கித் தோட்டா.
நல்லவைகளுக்கு போராடும் குணம் இனி வரும் காலங்களில்
மெல்ல மெல்ல காணாமல் போகும்
அபாயம்.
என்று ராஜேஷ் குமார் வேதனை வெளியிட்டுள்ளார். அவர் போட்டுள்ள இன்னொரு பதிவில் பெரும்பாலான தமிழக மக்களின் மன நிலையை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பதிவு:
நாட்டில் நடக்கும் அநியாயங்களைப்
பார்த்தால் சிங்கம் போல் கர்ஜிக்கத்
தோன்றுகிறது.
வாயைத் திறந்தால் மியாவ் என்ற சத்தம்.