நம்பினால் நம்புங்கள்.. இன்னும் 5 வருடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.30ஆக குறையுமாம்
டெல்லி: நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, இன்னும் 5 வருடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.30 என்ற அளவில் குறையப்போகிறதாம்.
இதுகுறித்து அமெரிக்க ஆய்வாளர் டோனி செபா இதுகுறித்து கூறுகையில், புதிய டெக்னாலஜிகள் பெட்ரோலிய பொருட்கள் மீதான சார்புத்தன்மையை குறைத்துவிடும். 2021-2020களில் ஆயில் தேவை 100 மில்லியன் பேரல்களில் இருந்து 70 மில்லியன் பேரல்ககளாக குறையும். அடுத்த பத்தாண்டுகளில் இது நடந்தே தீரும்.
எனவே பெட்ரோலிய பொருட்ககள் மீதான விலை குறையும். சுயமாக டிரைவ் செய்யும் எலக்ட்ரிக் கார்கள் வருங்காலத்தில் ஆளப்போகின்றன. மேலும் இந்த வகை கார்கள் விலை குறைவாகவும் இருக்கும்.
2030ம் ஆண்டுக்குள் 95 சதவீத மக்கள் சொந்தக்கார்கள் வைத்துக்கொள்வதைவிட இப்படியான சுய டிரைவ் கார்களை வைத்துக்கொள்வதை விரும்புவார்கள். இது ஆட்டோமொபைல் தொழிலில் சரிவை ஏற்படுத்தும். ஆயில் தொழிலையும் இது பாதிக்கும்.
மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2030க்குள் எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் பெருகும் என கூறியிருந்த நிலையில் டோனியும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.