5 வயதில் என்னா பேச்சு.. கிளைமேக்ஸ் தான் ஹைலைட்.. சால்வை போட்டு பாராட்டிய மு.க.ஸ்டாலின்
பொள்ளாச்சி: 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' எனும் நிகழ்ச்சியில் சிறுவன் ஒருவன் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.
சூலுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிய, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் இன்று பொள்ளாச்சி வருகை தந்தார். இதற்காக ஆச்சிப்பட்டி சங்கம்பாளையத்தில் பிரம்மாண்ட மேடையும், பொதுமக்கள் அமர பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலினுக்கு முத்தம் கொடுத்து, சிறுவன் ஒருவன் பாராட்டு தெரிவித்துள்ளான். பதிலுக்கு அந்த சிறுவனுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்த ஸ்டாலின், அவனது கையில் மைக்கை கொடுக்க, இரண்டு நிமிடங்களுக்கு கூட்டத்தை தனது பேச்சால் கட்டிப்போட்டுவிட்டான்.
அதில், "என் அன்பு உறவுகளுக்கு என் அன்பான வணக்கம்.. முத்தமிழ் அறிஞர் கலைஞர், மேலான மனிதர் கலைஞர், மனித நேயம் மிக்க கலைஞர், மனிதாபிமானம் மிக்கவர் கலைஞர், அன்பும் அருளும் இன்சொல்லும் நிறைந்த மனிதர் கலைஞர், பெரியோர்களை மதிக்கும் மனிதர் கலைஞர் என்று அடுக்கு மொழியில் கவிதை வாசிக்க, கூட்டத்தில் பலத்த கரகோஷம் எழுந்தது.
இறுதியில், அந்த சிறுவன் அடித்த பன்ச் தான் ஹைலைட்.. ' நீங்க வெற்றி அடைந்தவுடன் நான் தான் முதல் ஆளாய் வந்து உங்களுக்கு பாராட்டு தெரிவிப்பேன்" என்று சொல்ல, மீண்டுமொருமுறை கரகோஷம் அதிர்ந்தது.