முதலிரவில் ஆபாச வீடியோ எடுத்த கணவன்.. காவல் நிலையத்தில் இளம்பெண் பரப்பரப்பு புகார்
நாகர்கோவில் : முதலிரவன்று தன்னை ஆபாச வீடியோ எடுத்ததாக கணவன் மீது இளம்பெண் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்
நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த நிவேதா என்பவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தனக்கும் களியக்காவிளை அருகே உள்ள மடிச்சலைச் சேர்ந்த சஜூவுக்கும் கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி திருமணம் நடந்தது. சஜூ வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
திருமணத்தன்று இரவு சஜூவின் வீட்டில் எங்கள் முதலிரவு நடந்தது. அப்போது சஜூ என்னை ஆபாசமாக வீடியோ எடுத்தார். இதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரை கண்டித்து விட்டு நான் அறையில் இருந்து வெளியே வந்தேன்.
சஜூ ஆபாச வீடியோ எடுத்தது பற்றி எனது மாமனார் சரசப்பனிடம் சொன்னேன். அவர் தனது மகனை கண்டிப்பதற்கு பதில் அவன் அப்படித்தான், இதை வெளியில் சொன்னால் உன் வாழ்க்கை சீரழிந்து விடும் என கூறி என்னை எச்சரித்தார்.
அதன்பிறகு சஜூவும் அவரது குடும்பத்தினரும் என்னை சித்ரவதை செய்தனர். எனவே சஜூ மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நிவேதா தனது புகார் மனுவில் கூறி உள்ளார்.
புகாரின் பேரில் சஜூ, அவரது தந்தை சரசப்பன், தாயார் பேபி, உறவினர் அம்பிகா ஆகிய 4 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் மீது திருமண உறவில் நம்பிக்கை மோசடி,பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல்,திருமணம் ஆன பெண்ணை கணவர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கொடுமைப்படுத்துதல், மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கட்டிய மனைவியை கணவன் முதலிரவில் ஆபாச வீடியோ எடுத்ததாக இளம் பெண் கொடுத்துள்ள புகார் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.