For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகை அருகே மைனர் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த இளைஞர் கைது

நாகப்பட்டினம் அருகே மைனர் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

Google Oneindia Tamil News

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இரண்டாவதாக மைனர் பெண்ணை திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைஞாயிறு சந்தை வெளி தெருவைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கொடியாளத்தூரில் தனது உறவினர் வீட்டில் தங்கி நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

Young man trying to marry minor girl was arrested

அதே ஊரைச் சேர்ந்த அருள்(எ)அருள்ராஜ் என்பவர் கவிதாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இரு குழந்தைகள் உள்ளனர். இதை மறைத்து அவர் கவிதாவை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கவிதாவும், அருளும் கோயிலில் திருமணம் செய்து கொண்டு திருப்பூர் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

திடீரென கவிதாவை காணாததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அருள் உடன் சென்ற விபரம் தெரிந்து கவிதா வீட்டார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் இருவரையும் தேடி வந்தனர்.

அவர்கள் திருப்பூரில் இருப்பதை அறிந்து அங்கு விரைந்து சென்று இருவரையும் பிடித்தனர். திருப்பூரில் இருந்த இருவரையும் அழைத்து வந்து அருள்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். கவிதாவை மருத்துவ பசோதனைக்கு பிறகு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

English summary
A man was arrested who married a minor girl by hiding his first marriage. Nagappattinam police enquiry is going on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X