For Daily Alerts
Just In
சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!
பெருங்குடி ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.
சென்னை : சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று துரத்திச் சென்று சரமாரியாக வெட்டி உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று துரத்திச் சென்று அரிவாளால் சரிமாரியாக வெட்டி உள்ளது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இளைஞர் மீட்கப்பட்டு , சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இளைஞரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீஸார் மற்றும் வேளச்சேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Comments
railway police station stabbed probe perungudi பெருங்குடி ரயில் நிலையம் ரயில்வே போலீஸார் வெட்டு அரிவாள் விசாரணை
English summary
Youngster stabbed hardly in Perungudi Railway Station And now he is admitted in Royepetteh Government Hospital .
Story first published: Monday, December 11, 2017, 16:03 [IST]