வேலூரில் பயங்கரம்... 75 வயதான மூதாட்டி பலாத்கார முயற்சியில் கொலை- குடிகாரன் கைது
வேலூர்: வேலூர் மாவட்டம் பனமாடங்கி அருகே 75 வயதான மூதாட்டியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கொன்ற குடி போதை காமுகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக கணவரை இழந்த அந்த மூதாட்டி பனமாடங்கி பேருந்து நிலையம் அருகே வசித்து வந்துள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் ராமமூர்த்தி என்ற இளைஞர் குடி போதையில் தள்ளாடிய நிலையில் அங்கு வந்துள்ளார். தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
மூதாட்டி சத்தம் போடாமல் இருக்க அவரது வாயை அழுத்தமாக மூடி, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தான். முனகல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மற்றொரு பெண் அருகில் இருந்தவர்களை அழைத்து அவர்களின் உதவியுடன் மூதாட்டியை காப்பற்றினார்.
எனினும் மூதாட்டியின் வாயை அந்த குடிகாரன் அழுத்தி மூடியதில் மூச்சுத் திணறி முதாட்டி இறந்து விட்டார். இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் ராமமூர்த்தியை கையும் களவுமாக பிடித்து பனமாடங்கி போலீசாரிடம ஒப்படைந்தனர். போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மூதாட்டியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்றது தொடர்பாக ராமமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்த காட்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.