மனைவியை பிரசவத்துக்கு அனுப்பி விட்டு கொளுந்தியாளை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
நெல்லை: மனைவியை பிரசவத்துக்கு அனுப்பி வைத்து விட்டு அவரது தங்கையுடன் உல்லாசமாக இருந்து கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி அண்ணாநகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். கட்டிட தொழிலாளியான இவர் சேரன்மகாதேவியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டார். தியாகராஜனின் காதல் மனைவியின் உறவினர் வீடு மேலப்பாளையம் நாகம்மாள் புரத்தில் உள்ளது. அவர்கள் கணவன்-மனைவி இருவரையும் தங்கள் வீட்டுக்கு அழைத்து தங்க வைத்து சமரசம் பேசினர்.
அப்போது அந்த உறவினர் வீட்டில் தியாகராஜனின் மனைவிக்கு தங்கை உறவு முறையுள்ள செல்வி (வயது19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருந்தார். அவர் ஈரோட்டில் தனியார் பின்னலாடை கம்பெனியில் வேலை பார்த்து விடுமுறைக்கு வந்துள்ளார்.
அப்போது, தியாகராஜனின் மனைவி கர்ப்பிணியாக இருந்ததால், கொளுந்தியாள் உறவு முறையுள்ள ராணியிடம் அவர் சகஜமாக பழகினார். இதில் அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்து சில மாதங்களிலேயே தியாகராஜன், கொளுந்தியாள் ராணியிடமும் கள்ள உறவு கொள்ளத் தொடங்கினார். அதன்பின்னர் சில நாட்களில் தியாகராஜனின் வீட்டில் சமரசரம் ஏற்பட்டதால், தியாகராஜன் தனது காதல் மனைவியுடன் வெள்ளங்குழி சென்று விட்டார்.
சமீபத்தில் அவரது மனைவிக்கு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ராணியின் உடலில் மாற்றம் தெரியவே அவரது வீட்டில் சந்தேகம் அடைந்து விசாரித்தனர். அப்போது ராணி 6 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. மேலும் அக்காள் கணவர் தியாகராஜனுடன் தொடர்பு வைத்தது குறித்தும் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த ராணியும் அவரது பெற்றோரும் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி விசாரணை நடத்தி கட்டிட தொழிலாளி தியாகராஜன் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து தியாகராஜன் வெள்ளங்குழியில் உள்ள அவரது வீட்டில் இருந்த போது கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.