விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: த.மா.கா. போராட்டம் அறிவிப்பு
விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமாக போராட்டம் அறிவித்துள்ளது.
Recommended Video
ஈரோடு: விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார்.
த.மா.கா இளைஞரணியின் ஈரோடு மத்திய மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞரணி மாநில தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: காவிரி மேலாண்மை அமைக்கும் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் நடுநிலையோடு செயல்பட்டு தமிழகத்திற்கான தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வில் தமிழக அரசின் கவனகுறைவால் 50 சதவீத மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அடுத்த ஆண்டிலாவது அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும். மணல் கடத்தலில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதைப்போல அரசியல்வாதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் விவசாய விளை நிலங்கள் வழியாக மின்கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து 11 மாவட்டத்தில் இளைஞரணி சார்பில் அடுத்த வாரம் முதல் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு யுவராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.