விவேகம் திரைப்படத்தை பார்த்தபோது மயங்கி விழுந்து இறந்த ரசிகர்.. காரைக்கால் தியேட்டரில் சோகம்
சென்னை: தியேட்டரில் விவேகம் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த வாலிபர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் காரைக்கால் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள கிளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சபுருதீன் (31). திருமணமாகி 4 வருடங்கள்தான் ஆகிறது.
வெளிநாட்டில் வேலை செய்து வந்த அவர் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அஜித் நடித்த விவேகம் திரைப்படம் ரிலீசான நிலையில், நண்பர்களோடு நேற்று படம் பார்க்க காரைக்காலிலுள்ள தியேட்டருக்கு சென்றார்.
படம் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. சுருண்டு விழுந்த அவரை நண்பர்கள் உடனடியாக மருத்துவமனை தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவத்தால் தியேட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சபுருதீன் மனைவி ஆலம் முனிராபேகம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.