For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலாத்காரம் செய்ய முயன்ற கும்பலிடம் இருந்து பெண்ணை காத்த இளைஞர்- உயிரை பறிகொடுத்த சோகம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பல்லாவரம் ரயில் நிலையம் அருகே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கும்பலிடம் இருந்து பெண்ணை காப்பாற்ற முயன்ற வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட ஜான்சன் 20 வயதே நிரம்பிய இளைஞர். இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் மறைமலை நகர் செல்வதற்காக பல்லாவரம் ரயில் நிலையம் மேம்பாலம் அருகே வந்துள்ளார் ஜான்சன். அப்போது பாலத்தின் அடியில் பெண்ணிடம் ஒரு கும்பல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Youth stabbed to death while saving a woman from rape

குழந்தைக்கு தாய்பால் கொடுத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணை கையை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்த ஜான்சன் தட்டி கேட்டார். அந்த கும்பலிடம் இருந்து பெண்ணை மீட்க முயன்றுள்ளார். அப்போது கும்பலில் இருந்த ஒருவர் ஜான்சனை கத்தியால் குத்தினார்.

இதனைப் பயன்படுத்தி அந்த பெண் தப்பி விட்டார். இதையடுத்து ஆத்திரமடைந்த கும்பல் ஜான்சனை இழுத்து அருகில் இருந்த புதருக்குள் போட்டு விட்டு தப்பி விட்டது. ஜான்சன் மயக்கமாக கிடந்தது, யாருக்கும் தெரியவில்லை.

நீண்ட நேரம் கழித்துதான் இது தெரிய வந்துள்ளது. ஆனால் அதற்குள் ஜான்சன் இறந்து விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக், சதீஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

English summary
In Chennai's Pallwaram, a youth was stabbed to death by a gang, while he tried to save a woman from rape.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X