சிறுமியை 6 மாதமாக கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர்.. நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்த அவலம்
தஞ்சை: திருட்டு பட்டம் கட்டி சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை கொடுத்து நிர்வாணமாக்கிய அவலம் தஞ்சையில் நடந்துள்ளது.
திருவையாறைச் சேர்ந்த 14 வயது சிறுமி. இவர் தந்தை ஆற்றில் மணல் அள்ளுவதற்கு செல்லும்போதெல்லாம் சிறுமியை இவர் அழைத்து செல்வது வழக்கம். அப்போது அந்த சிறுமியை கடந்த 6 மாதங்கள் 16 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இந்த பிரச்சினைக்கு முழுக்க முழுக்க காரணம் சிறுமியின் தந்தை என்ற கோபத்தில் அவரது தாய் வீட்டை விட்டு கோபித்து கொண்டு சென்றுவிட்டார். தாயை சமாதானப்படுத்த பக்கத்துவீட்டிலிருந்து போன் வாங்கியுள்ளார் சிறுமி.
[ஆந்திராவில் 37 தமிழர்கள் கைது.. செம்மரம் கடத்தியதாக குற்றச்சாட்டு!]
மரத்தில் கட்டிய அவலம்
இதை பார்த்த 16 வயது சிறுவனின் உறவினர்கள் 5 பேர் சிறுமி செல்போனை திருடிவிட்டதாக கூறி கடந்த 18-ஆம் தேதி அந்த பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்து நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
பின்னர் அந்த சிறுமிக்கு சூடு போட்டுள்ளனர். இதையடுத்து அந்த 5 பேரும் சென்றுவிட்டவுடன் கட்டுகளை அவிழ்த்து கொண்டு வாழைத்தோப்புக்கு சென்றார் சிறுமி. அப்போது அங்கிருந்த விவசாயி மூலம் தந்தைக்கு தகவல் கொடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
4 பேர் பலாத்காரம்
இது தொடர்பாக திருவையாறு மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை அளித்துள்ள புகாரில், தனது மகளை 16 வயது சிறுவன் உள்பட 4 பேர் 6 மாதங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும், இவ்விவகாரம் அறிந்த சிறுவனின் உறவினர்களான 3 ஆண்கள், தனது மகளை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திருச்சி சிறையில் அடைப்பு
சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், மகேந்திரன், வித்யா ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். 16 வயது சிறுவன் சிறார் சீர்திருப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.