இந்த கொடூரன்களை என்ன பண்ணலாம்.. 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய.. பெற்ற தந்தையும், தாத்தாவும்!
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி உள்ளனர் தந்தையும் தாத்தாவும்
தஞ்சை: இவனுங்கள என்ன பண்ணலாம்னு சொல்லுங்க, 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி விட்டிருக்காங்க, பெற்ற தந்தையும், தாத்தாவும்.. அந்த குழந்தை இப்போது கர்ப்பமாக இருக்கிறாள்!
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் இளங்கோவன்.. இவரது மனைவி 5 வருஷத்துக்கு முன்னாடியே இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இதில் இளைய மகள் மட்டும், சித்தி வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர்... 15 வயது ஆன மூத்த மகளோ அவரது தந்தையுடன் வந்து வசித்துள்ளார். அப்போது பெற்ற மகளுக்கு இளங்கோவன் பாலியல் தொல்லை தர ஆரம்பித்துள்ளார்.
இந்த விஷயம் அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்துவிட்டது.. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சிறுமியை அழைத்து கொண்டு போய், தாத்தா மாரிமுத்து வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துள்ளனர்.
அங்கிருந்தபடியே சிறுமி ஸ்கூலுக்கு சென்று வந்துள்ளார்.. இப்போது 9-ஆம் வகுப்பு படிக்கிறார்.. இந்நிலையில், திடீரென சிறுமிக்கு வயிற்றுவலி வந்துவிட்டது.. இதனால் ஆஸ்பத்திரியில் அழைத்து கொண்டு டெஸ்ட் செய்து பார்த்ததில், 5 மாதம் கர்ப்பம் என்று தெரியவந்தது.
இதை கேட்டு இன்னும் ஆவேசமடைந்த மக்கள், சைல்டு லைன் அமைப்பினர் மூலம் வல்லம் அனைத்து போலீசுக்கு புகார் தந்தனர்.. இதையடுத்து, அவர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், தாத்தா மாரிமுத்துவும், அப்பா இளங்கோவனும் செய்த கொடுமைகள் வெளியே வந்தன.. இதையடுத்து 2 அப்பா, மகனை போலீசார் தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.. 2 பேர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
4 மாதமாக தொல்லை.. வீடியோ எடுத்து மிரட்டல்.. நைனார்குப்பம் சசிகலா தற்கொலை.. திமுக பிரமுகருக்கு செக்!
இப்படிதான் சில தினங்களுக்கு முன்பு சென்னையில், "காய்ச்சலாக இருக்கிறது" என்று, அப்பாவிடம் மகள் மாத்திரை கேட்டுள்ளார்.. மனநலம் பாதிக்கப்பட்ட மகள் என்றுகூட பார்க்காமல் அந்த மிருகம் பெற்ற மகளையே நாசம் செய்துவிட்டது.. இந்த காம கொடூரர்களை எல்லாம் என்ன தான் செய்வது? ஒரு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது தமிழகத்தின் அராஜகங்கள்.. சட்டத்தை கடுமையாக்க வேண்டும்.. தயவுதாட்சண்யமே இல்லாமல் இந்த கழிசடைகளை சுட்டு தள்ளினாலும் தப்பே இல்லை.