விநாயகர் கோயில் ஆக்கிரமிப்பு பகுதியில் வெளியே வந்த இரட்டை தலை பாம்பு.. தஞ்சையில் பரபரப்பு
தஞ்சாவூர்: விநாயகர் கோயில் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் இரட்டை தலை பாம்பு கண்டுபிடிக்கபபட்டதால், தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சையில் வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே சமீபத்தில் நகராட்சியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அந்த இடத்தில் தற்போது நகராட்சி ஊழியர்களால் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அப் அந்த இடத்தில் இரு தலை கொண்ட பாம்பு நெளிவதை ஊழியர்கள் பார்த்துள்ளனர். இதனால் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து பரிசீலனை நடத்தினர்.
அப்போது, மண்ணுளி பாம்பு ஒன்று அந்த இடத்தில் காணப்பட்டது தெரியவந்தது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இதனையடுத்து அந்த மண்ணுளி பாம்பு தீயணைப்புத் துறையினர் இடம் ஒப்படைக்கப்பட்டது.
இரட்டை தலை போன்ற அமைப்புடன் அந்த பாம்பு காணப்பட்டது.
இது தான் மனிதாபிமானம்.. சாக்கடை மூடியில் சிக்கிய 'குண்டு' எலியை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்!