குளத்தில் மூழ்கிய பாட்டி.. நண்பன் பட பாணியில் காப்பாற்றிய இளைஞர்கள்.. தஞ்சை அருகே பரபரப்பு
Recommended Video
தஞ்சை: தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கிய பாட்டியை நண்பன் பட பாணியில் இரு இளைஞர்கள் காப்பாற்றியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மையப் பகுதியில் காசாங் குளத்துக்கு சின்னபொண்ணு (62) சென்றுள்ளார். அவர் கால் தவறி குளத்தில் விழுந்து விட்டார். அப்போது அவரை காப்பாற்றுவதற்கு அங்கு யாரும் இல்லை.
தீயணைப்பு துறை
இதையடுத்து சுமார் 20 நிமிடம் மிதந்து கொண்டே கிடந்தார். இதனால் அவர் இறந்துவிட்டார் எனக் கருதி பொதுமக்கள் தீயணைப்பு துறையை வரவழைத்து அந்த பாட்டியை கயிறு கட்டி இழுத்தனர்.
[எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து.. போலீஸ் கெடுபிடியை மீறி முருகன் பரபர பேட்டி! ]
ஆட்டோ
ஆனால் தீயணைப்பு துறையினர் இந்தப் பாட்டிக்கு உயிர் உள்ளது என்று கூறினர். உடனே அந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அந்த பாட்டியை தூக்கி கொண்டு ஆட்டோவில் அழைத்து செல்வதற்காக சென்றனர்.
வேகமாக
ஆனால் எந்த ஆட்டோவும் முன்வரவில்லை. ஆகவே தனது இரண்டு சக்கர வாகனத்தில் ஏறி சாத்தான்குளத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை வேகமாக சென்று அந்தப் பாட்டியை உயிர் பிழைக்க செய்தனர்.
இளைஞர்கள்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பாட்டி தற்போது நலமாக உள்ளார். இதையடுத்து பாட்டியின் உயிரை காப்பாற்றிய இளைஞர்கள் ஹானஸ்ட் ராஜ் , விக்கி ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.