தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு வாழைப்பழத்தில் விஷம்.. இன்னொன்றில் இல்லை.. காதலி கொலை.. சிக்கிய ஐயப்பன்.. 2019ன் திகில் கிரைம்!

காதலியை வாழைப்பழத்தில் விஷம் வைத்து கொன்றார் காதலன்

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: "இந்தா.. வாழைப்பழம் சாப்பிடு.. இதில விஷம் கலந்திருக்கு.. நாம செத்து போயிடலாம்.." என்று சொல்லி காதலியை பழம் கொடுத்தே சாகடித்துள்ளார் இளைஞர்! வாழைப்பழத்தில் விஷம் வைத்து கொன்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை இந்த மாத இறுதியில் ஏற்படுத்தியது.

கும்பகோணத்தில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார் அந்த இளம்பெண்.. நந்தவனம் கிராமத்தை சேர்ந்தவர்.. அப்போதுதான் ஐயப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.. தனியார் மகளிர் சுய உதவிக்குழு நிறுவனத்தில் ஐயப்பன் வேலை பார்த்து வந்தார்.. 5 வருட காதல் இவர்களுடையது!

2019 Year Ender crime stories: young woman murder by lover near tanjore

பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஐயப்பன் வாத்தியாராக வேலை பார்த்தபோது, அந்த ஸ்கூலில் +2 படித்தவர் தான் இந்த இளம்பெண்.. ஆனால், 5 வருஷத்துக்கு பிறகு, இப்போது அந்த பெண்ணுடன் பேசுவதை, பழகுவதை ஐயப்பன் நிறுத்திவிட்டாராம்.

இதனால் சந்தேகம் அடைந்த ஐயப்பன், பெண்ணை பற்றி நிறைய பேரிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் தன் காதலி, அவர் வேறு ஒரு இளைஞருடன் பழகி வந்தது தெரியவந்தது. இதை பற்றி ஐயப்பனே அந்த பெண்ணை நேற்று சந்தித்து நேரடியாக விசாரித்தார். அதற்கு "நாங்க வெறும் ஃப்ரண்ட்ஸ்தான்.. சந்தேகப்படாதே.." என்று சொல்லி சமாளித்துள்ளார் காதலி.

Crime stories 2019: சித்தியுடன் உறவு.. தங்கச்சியையும் விடலை.. கொதித்தெழுந்த தம்பி.. கொன்ற காமவெறியன்Crime stories 2019: சித்தியுடன் உறவு.. தங்கச்சியையும் விடலை.. கொதித்தெழுந்த தம்பி.. கொன்ற காமவெறியன்

ஆனால் ஐயப்பனுக்கு என்னமோ சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.. மனசு ஆறவில்லை.. அதனால் அந்த பெண்ணுடன் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தார்.. ஒரு கட்டத்தில், தகராறு முடிந்ததும், "சரி வா.. வீட்டுல போய் உன்னை டிராப் பண்ணிடறேன்" என்று சொல்லி அவரை பைக்கில் உட்கார வைத்து கூட்டி வந்துள்ளார். ரெட்டிப்பாளையம் அருகே உள்ள இருட்டான பகுதியில் வந்து பைக்கை நிறுத்தினார்.

அப்போது காதலியிடம் திடீரென உருக்கமாக பேச ஆரம்பித்தார்.. திடீரென 2 வாழைப்பழத்தை காதலியிடம் நீட்டினார்.. "இனிமேல் நாம ஒன்னு சேர மாட்டோம்னு எனக்கு சந்தேகம் வந்துடுச்சு.. நம்மை 2 வீட்டிலயும் பிரிச்சிடுவாங்க.. நாம வாழறதைவிட, இந்த வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு இறந்துவிடலாம்' என்று சொல்லி பழத்தை நீட்டினார்.

அதில் ஒன்றில் விஷம் கலந்தது.. இன்னொன்றில் விஷம் இல்லாதது.. விஷம் கலந்த பழத்தை காதலியிடம் நீட்ட அவரும் அதை வாங்கி சாப்பிட்டார்.. விஷம் இல்லாத பழத்தை ஐயப்பன் சாப்பிட்டார். இதற்கு பிறகு வீட்டில் கொண்டு போய் காதலியை இறக்கிவிட்டுவிட்டு ஐயப்பன் கிளம்பி சென்றுவிட்டார்.

வீட்டிற்குள் நுழைந்ததும் காதலிக்கு தலை சுற்றி கொண்டுவந்தது.. விஷயத்தை தந்தையிடம் அந்த பெண் சொல்ல.. உடனடியாக பதறியடித்து கொண்டு, ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்... ஆனால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.. இதனையடுத்து ஐயப்பனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

English summary
2019 Year Ender crime stories: young woman murder by lover with poisonous banana near tanjore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X