தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உனக்கு 57.. எனக்கு 27.. கையும் களவுமாக காதலனுடன் சிக்கிய மூதாட்டி.. கடைசியில் நடந்த விபரீதம்

Google Oneindia Tamil News

தஞ்சை தஞ்சையில் தகாத உறவு வைத்துக்கொண்ட மூதாட்டி அவமானம் தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    தஞ்சை: இளைஞருடன் கள்ள உறவு: அவமானம் தாங்காமல் மூதாட்டி தற்கொலை!

    கையும் களவுமாக ஊர் மக்கள் முன்பு சிக்கியதால் மூதாட்டியும், இளைஞரும் விஷம் குடித்தனர். இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளைஞர் உயிருக்கு போராடி வருகிறார்.

     தவ்ஹித் ஜமாஅத் திமுகவுக்கு ஆதரவு - போகிற போக்கில் கமல், சீமானுக்கு பொளேர் அறிக்கை தவ்ஹித் ஜமாஅத் திமுகவுக்கு ஆதரவு - போகிற போக்கில் கமல், சீமானுக்கு பொளேர் அறிக்கை

    தஞ்சை சூரியன் பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பச்சையம்மாள் என்ற 57 வயதான மூதாட்டி. இவரும் அதே பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் தேவேந்திரனும் சேர்ந்து அதே கிராமத்தில் சாலையோரத்தில் டிபன் சென்டர் நடத்தி வந்துள்ளார்கள்.

    தகாத உறவு

    தகாத உறவு

    இதனிடையே டிபன் சென்டர் நடத்தி வந்ததால் பச்சையம்மாளுக்கும், தேவேந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் வெளியான போது ஊர் மக்கள் அனைவரும் அந்த இருவரையும் திட்டி எச்சரித்துள்ளனர்.

    சிக்கிய இளைஞரை

    சிக்கிய இளைஞரை

    அண்மையில் இவர்களுக்கு உள்ள கள்ளத்தொடர்பு மேம்பட்டு பச்சையம்மாள் வீட்டில் தேவேந்திரன் இருப்பதை கிராம மக்கள் கண்டனர். அந்த இளைஞரை வீட்டில் வைத்து சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர். அத்துடன் அவர்களை சரமாரியாக திட்டி உள்ளனர்

    விஷம் குடித்து சாவு

    விஷம் குடித்து சாவு

    இதனால் அவமானம் அடைந்த பச்சையம்மாள் மற்றும் தேவேந்திரன் மனம் உடைந்தனர். இருவரும் சேர்ந்து கத்திரி குளம் அருகே அவமானம் தாங்க முடியாமல் பூச்சி மருந்து குடித்தனர் இதில் சம்பவ இடத்திலேயே பச்சையம்மாள் உயிரிழந்தார்.

    போலீசார் விசாரணை

    போலீசார் விசாரணை

    இதனையடுத்து தேவேந்திரனை அப்பகுதி மக்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் உயிருக்கு போராடி வருகிறார்.இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் பல்கலைகழகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத உறவு வைத்துக்கொண்ட மூதாட்டி அவமானம் தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    An old woman who had an abusive relationship in Thanjavur committed suicide by drinking poison as she could not bear the humiliation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X