தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தஞ்சாவூர் : கூலி தொழிலாளியின் கண்ணை கட்டி காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய நால்வர் கைது

பாபநாசம் அருகே கூலி தொழிலாளியை தாக்கிய வழக்கில் நான்கு பேரை அம்மாபேட்டை காவல்நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: பணம் திருடியதாக இளைஞர் ஒருவரின் கண்ணைக் கட்டி காட்டு மிராண்டித்தனமாக தாக்கியதாக நான்கு பேரை அம்மாபேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாபநாசம் தாலுகா பூண்டி மேலத் தெரு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்வரின் மகன் ராகுல், 22 கூலித் தொழில் செய்து வருகிறார். பணத்தை திருடிவிட்டதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல், ராகுலை இழுத்துச் சென்று துண்டால் கண்களை கட்டிவைத்து ராகுலின் பின்புறம் பிரம்பால் சரமாரியாகத் தாக்கினார்கள்.

Daily wage labourer blindfolded and canned by a group 4 arrested

ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் துடிதுடித்த ராகுல், அண்ணா.. வேணாம் அண்ணா.. இனிமே எடுக்க மாட்டேண்ணே.. கொடுத்து விடுகிறேன். பிளீஸ் அடிக்காதீங்க எனக் கெஞ்சுகிறார். ஆனால் இரக்கம் காட்டாத அந்த கும்பல், தொடர்ந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் துடிதுடித்த ராகுல் மயக்கமடைந்து அந்த இடத்திலேயே சரிந்தார். ஆத்திரம் தீராத அந்த கும்பல் மயக்கநிலையில் இருந்த ராகுலை மேலும் தாக்கியுள்ளனர். இந்த காட்சியை அந்த கும்பலில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர்கள் கடுமையாகத் தாக்கியதில் துடிதுடித்து மயக்கம் அடைந்து சரிந்த கூலி தொழிலாளி வலி பொறுக்க முடியாமல் எலி மருந்து சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 அண்ணே விடுங்க...கதறியும் விடாமல் அடித்த மிருக குணம் படைத்த இளைஞர்கள் - ரத்தக்கண்ணீர் வரும் வீடியோ அண்ணே விடுங்க...கதறியும் விடாமல் அடித்த மிருக குணம் படைத்த இளைஞர்கள் - ரத்தக்கண்ணீர் வரும் வீடியோ

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அம்மாபேட்டை காவல்நிலைய போலீசார், நான்கு பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளதாக அம்மாபேட்டை காவல்நிலைய துணை கண்காணிப்பாளர் ஜி. ஆனந்த் கூறியுள்ளார்.

English summary
A 24-year-old daily wage labourer was blindfolded and canned by a group of caste Hindus accusing him of stealing money near Ammapettai in Thanjavur. 4 detained. Investigations are on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X