அட இவ்வளவு பேரா! தஞ்சாவூரை அதிரவைத்த திமுக.. ஸ்டாலின் பிரச்சாரத்தில் கூடிய மாபெரும் கூட்டம்!
நேற்று திமுக சார்பாக தஞ்சாவூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருக்கிறது.
Recommended Video
தஞ்சாவூர்: நேற்று திமுக சார்பாக தஞ்சாவூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருக்கிறது. மக்கள் நிறைய பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
திமுக கட்சி தேர்தல் களத்தில் தற்போது மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. வேட்பாளர்களை அறிவித்த கையோடு வேகமாக பிரச்சாரத்தை தொடங்கி செய்து வருகிறது.
நேற்றுதான் திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திருவாரூர் இடைதேர்தல் தொகுதி வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்காக அவர் தீவிரமாக நேற்று மாலை வரை பிரச்சாரம் செய்தார்.
தஞ்சாவூர் பிரச்சாரம்
நேற்று திருவாரூரில் பிரச்சாரம் முடித்த பின் திமுக தலைவர் ஸ்டாலின் தஞ்சாவூர் சென்று பிரச்சாரம் செய்தார். தஞ்சாவூரில் அவர் மாலையே சென்று சில இடங்களில் சிறிய சிறிய பிரச்சாரம் செய்தார். அதன்பின் பிரச்சார கூட்டம் நடக்கும் திலகர் திடலுக்கு சென்றார்.
திலகர் திடல்
திலகர் திடலில் இதற்காக மிகப்பெரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மிகப்பெரிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது. திமுக கூட்டங்களில் சமீப காலமாக மிஸ்ஸாகிக் கொண்டு இருந்த பெரிய மேடை, பெரிய கூட்டம் இதில் மிக கச்சிதமாக இடம்பெற்று இருந்தது. கூட்டணி கட்சியை சேர்ந்த சில தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அறிமுகம்
லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் ஸ்டாலின் இதில் அறிமுகப்படுத்தினார். தஞ்சாவூர், நாகை லோக்சபா தொகுதி வேட்பாளர்கள், மற்ற டெல்டா பகுதி வேட்பாளர்கள், அதேபோல் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை ஸ்டாலின் இதில் மக்களிடம் அறிமுகப்படுத்தினார்.
பெரிய கூட்டம்
இந்த மாநாட்டில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருந்தது. டெல்டாவை சேர்ந்த பல கிராம மக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த தேர்தல் பிரச்சார கூட்டங்களில் திமுக இதுவரை நடத்திய கூட்டங்களில் இதுதான் பெரிய கூட்டம் என்று கூறப்படுகிறது.