கஜா: நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Recommended Video
தஞ்சாவூர்: கஜா புயல் பாதிப்பை அடுத்து நிவாரண பணிகள் நடந்து வருவதால் பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றது.
இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கண்டிப்பாக இன்று பள்ளிகளுக்கு வந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சையில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்புக் கல்லூரிகளில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.