ராஜராஜசோழன் ஆன்மா சாந்தியடைய பெரிய கோயிலில் தியானமா? சின்னப்புள்ளத்தனமா இருக்கே!
Recommended Video
தஞ்சை: ராஜராஜசோழனின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சிக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஏற்பாடு செய்ததாக ஒரு தகவல், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் தஞ்சை பெரிய கோவிலில், தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு மக்கள் மத்தியில், எதிர்ப்பு கிளம்பியது. ஹைகோர்ட் மதுரை கிளையில், முத்துகிருஷ்ணன் என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, நீதிமன்றம், ரவி சங்கர் ஏற்பாடு செய்த தியான நிகழ்ச்சிக்கு தடை விதித்தது.
இதனிடையே, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டி என்ற பெயரில், ஒரு பேப்பர் கட்டிங் சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.
அதில் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஆன்மா சாந்தி அடையவில்லை. அது ரவிசங்கர் குருஜியிடம் உள்ள ஓலைச்சுவடிகள் மூலம் தெரியவந்தது.
அவரது அறிவுரைப்படி பெரியகோயிலில் தியான பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்தோம். தியானம் செய்தால் ராஜராஜசோழனின் ஆத்மா சாந்தி அடையும். பெரிய கோவிலில் உள்ள சில குறைபாடுகள் நீங்கும். இவ்வாறு அவர் கூறியதாக அந்த பத்திரிகை செய்தி கூறுவதாக வைரல் போஸ்டில் தகவல் இடம் பெற்றுள்ளது.
அருண்மொழியோட ஆவி கோவிலை சுத்துகிறது!!
— இராசபாளையத்துக்காரன் (@kaleeswaran_18) December 8, 2018
அதை சாந்தி படுத்தவே தியானம்
அடேய் அப்ப கோவில்ல சாமி இல்லைனு நீங்களே சொல்றீங்களாடா😂😂😂 pic.twitter.com/KO7s0X3sDW
இதுகுறித்து சுவாமிநாதனிடம் விளக்கம் கேட்க முற்பட்டபோது போன் இணைப்பு கிடைக்கவில்லை. பெரிய கோயிலுக்கு செல்லும் முக்கிய பிரமுகர்களின் பதவி பறிபோவதாக ஒரு மூட நம்பிக்கை உண்டு. இந்த நிலையில்தான், இவ்வாறு ஒரு வைரல் போஸ்ட் சுத்தி வருகிறது. இது பக்தர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.