ஸ்மார்ட் போன் வாங்குங்கள்.. 1 கிலோ வெங்காயத்தை ஃப்ரீயா பெறுங்கள்.. அதுவும் "எஸ்.டி.ஆரிடம்" இருந்து!
Recommended Video
பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஸ்மார்ட் போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் கிடைக்கும் என அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக தங்கத்தை போல் மதிப்புமிக்கதாகிவிட்டது. ஒரு கிலோ வெங்காயம் கோயம்பேட்டில் ரூ 180-க்கு விற்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை ரூ 170-க்கு விற்கப்படுகிறது.
வடஇந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ 200 முதல் ரூ 250 வரை விற்கப்படுகிறது.
சம்பவங்கள்
வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் அடுத்த வாரத்தில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தங்கம், வெள்ளியை காட்டிலும் வெங்காயத்தை மர்மநபர்கள் திருடும் சம்பவங்கள் நடந்தேறுகின்றன.
உற்பத்தி குறைவு
இந்த வெங்காய விலை உயர்வானது, உற்பத்தி குறைவு மற்றும் மழைப்பொழிவால் ஏற்பட்டுள்ளது. இன்னும் 45 நாட்களுக்கு விலை குறையாது என கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்கள்
இந்த நிலையில் பட்டுக்கோட்டையில் எஸ்டிஆர் மொபைல் கடை என்ற கடைவுள்ளது. இந்த கடையில் ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆபரை வழங்கியுள்ளது.
கடைகளில் கூட்டம்
ஸ்மார்ட் போன் வாங்கும் நபர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த விளம்பரம் தற்போது வைரலாகி வருகிறது. ஒரு ஸ்மார்ட் போனை ரூ 5000 கொடுத்து வாங்க தயாராகவே உள்ளனர். இதனால் இந்த கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.
நோ ஆன்லைன்
ஆன்லைனில் போன் வாங்க முற்படும் தஞ்சை மாவட்ட மக்கள் இந்த கடையில் வாங்கினால் போன் கிடைப்பதுடன் அதைவிட காஸ்ட்லியான வெங்காயம் இலவசமாக கிடைக்கும் என்பதால் கடையில் கூட்டம் அலைமோதுகிறது. இன்னும் சிலரோ கிலோ 180 வெங்காயத்துக்கு ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதா. அதற்கு பதிலாக அந்த காசில் ஏராளமான வெங்காயத்தை வாங்கலாம் என்கின்றனர்.