பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜூக்கு கொரோனா உறுதி.. அரசு மருத்துவமனையில் அனுமதி
தஞ்சை: பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவாக நேற்று 5849 பேருக்கு தொற்று செய்யப்பட்டது.
தமிழகத்தில் இந்த கொரோனா எல்லோரையும் தாக்கி உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அமைச்சர்கள் முதல் ஐஏஎஸ் கலெக்டர்கள் வரை பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகத்தில் நாளுக்கு நாள் எம்எல்ஏக்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுவதால் அதன் தாக்குதலுக்கு எம்எல்ஏக்கள் உள்ளாகி வருகிறாரகள்..
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜூவுக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதையடுத்து அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜூ தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து இருக்கிறது. ஒரு எம்எல்ஏ (ஜெ.அன்பழகன் திமுக) உயிரிழந்துள்ளார்.