தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை

கஜா புயலை தொடர்ந்து தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: கஜா புயலை தொடர்ந்து தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் காரணமாக தமிழகம் பெரிய பேரிடரை சந்தித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. 7 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை அடியோடு மோசமாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Rain may hit Delta region today says Chennai Weather Department

கடந்த வாரம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்தது. ஆனால் இது கடைசியில் வலுவிழந்தது.

இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் டெல்டாவில் கனமழை பெய்யும். தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், கும்பகோணம், முத்துப்பேட்டை. மயிலாடுதுறை, மன்னார்குடி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கஜா புயல் நிவாரண பணிகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். மழை காரணமாக பணிகள் பாதிக்கப்படும் நிலையை அடைந்துள்ளது.

சென்னையில் இன்று மாலை மழை பெய்யலாம். காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English summary
Rain may hit Delta region today says Chennai Weather Department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X