சாதி பிரச்சினையை தூண்டி விட்ட சிங்கப்பூர் கனிமொழி.. வர வைத்து கைது செய்த போலீஸ்!
சாதி விவகாரம் தொடர்பாக பேசி ஆடியோ வெளியிட்ட கனிமொழி திருச்சியில் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
தஞ்சாவூர்: சாதி பிரச்சனையை தூண்டி விட்டதே ஒரு பெண் என்றால் நம்ப முடிகிறதா.. கடந்த 20 நாட்களாக தமிழ்நாட்டையே பரபரப்பாக வைத்திருந்தது ஒரு பெண் என்றால் நம்ப முடிகிறதா.. ஒரு சமுதாய பெண்களின் ஒழுக்கத்தை பற்றி இன்னொரு சமுதாயத்தை சேர்ந்த பெண் கேவலமாகவும், இழிவாகவும் பேசி இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா.. நம்பித்தான் ஆகணும்.. அவர்தான் கனிமொழி!
கடந்த 16-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரு ஆடியோ வெளியானது. அதில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை பற்றி தவறாகவும், அந்த ஜாதி பெண்களின் ஒழுக்கத்தை விமர்சித்தும் பேசப்பட்டிருந்தது.
இப்படி ஒரு ஆடியோவை வெளியிட்டது இன்னொரு ஜாதியை சேர்ந்தவர்கள்! அதனால் சம்பந்தப்பட்ட ஜாதியினர் போராட்டத்தில் இறங்கினர். தங்களது எதிர்ப்புகளை ஆக்ரோஷமாக பதிவு செய்தனர்.
கொடுத்ததெல்லாம் என்னாச்சு.. ஏமிரா சீட்டிங்கா.. ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி செம டென்ஷன்!
ஆடியோ
இதனை அடுத்து, போலீஸ் இந்த விஷயத்தில் தலையிட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு அந்த ஆடியோவில் பேசியவர்கள், அதற்கு உதவியாக இருந்தவர்கள் என 4 பேரை பேராவூரணியில் கைது செய்தது போலீஸ். மேலும் விசாரணையில், சிங்கப்பூரிலிருந்து அந்த ஆடியோ வெளியானது என்று தெரியவந்ததால், அது சம்பந்தமாக 4 பேரை அங்கிருந்து வரவழைத்தும் கைது செய்யப்பட்டனர்.
இளம்பெண் கனிமொழி
இருந்தாலும் இவர்கள் எல்லாம் அம்புகள்தானே தவிர எய்தது யார் அதாவது மூலக்காரணம் யார் என்ற விசாரணை நீண்டு கொண்டு போனது. இப்போது அதனையும் போலீசார் கண்டுபிடித்து விட்டார்கள். சிங்கப்பூரில் இருந்து ஜாதி ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்து ஆடியோவை வெளியிட்டது ஒரு இளம்பெண்ணாம்.. அவர் பெயர் கனிமொழி என்பதாம்!
வீட்டு வேலை
இவர் தஞ்சாவூர் அருகே திருமங்கலக்கோட்டை மாதவன் குடிகாட்டை சேர்ந்தவர் என்றும் 40 வயதான இவர், சிங்கப்பூரில் 10 வருஷமாக இருக்கிறாராம்.. அங்கு வீட்டு வேலைதான் செய்து வந்திருக்கிறார். இவர்தான் தன் சாதி பெண்களை இன்னொரு சாதி மக்கள் மோசமாக பேசிவிட்டார்கள், என்றுகூறி மிகக் கேவலமாக ஆடியோவில் பேசியிருக்கிறார்.
திருச்சி ஏர்போர்ட்
இந்த தகவல் உறுதியானதை அடுத்து போலீசார், 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்திய தூதரகத்தின் உதவியுடன் கனிமொழியை இந்தியாவிற்கு அழைத்து வரும் வேலைகளும் ஆரம்பமானது. அதன்படி நேற்று சாயங்காலம் திருச்சி ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய கனிமொழியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் திருவாரூரை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதால், அவரது கைதும் விரைவில் அரங்கேறும் என்று சொல்லப்படுகிறது.