தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விண்ணை முட்டிய தமிழ் மந்திரம்.. கோலாகலமாக நடந்த தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு.. மக்கள் பக்தி பரவசம்

தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தொடங்கி நடந்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு.. ஏராளமாக திரண்ட பக்தர்கள் - வீடியோ

    தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு இன்று கோலாகலமாக நடந்தது. தமிழ், சமஸ்கிருதம் இரண்டு மொழியிலும் குடமுழுக்கு நடைமுறைகள் நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு பெரிய கோவில் எனப்படும் பெருவுடையார் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்தனர்.

    சோழ மன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது பெரியகோவில். 1000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட [பெரிய கோவில் ஆகும் இது. பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த கோவில் மராட்டிய மன்னர்களால் பிருகதீசுவரம் என்று அழைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தொடங்கி நடந்து வருகிறது. இதனால் பெரிய கோவில் எனப்படும் பெருவுடையார் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து வருகிறார்கள்.

    தஞ்சாவூர் கும்பாபிஷேகம் பார்க்க போறீங்களா தட்டு, வீணை, தலையாட்டி பொம்மை வாங்கிட்டு வாங்கதஞ்சாவூர் கும்பாபிஷேகம் பார்க்க போறீங்களா தட்டு, வீணை, தலையாட்டி பொம்மை வாங்கிட்டு வாங்க

    விழா தொடக்கம்

    விழா தொடக்கம்

    8வது யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. அதன்பின் மகாபூர்ணஹதி பூஜை, ஹோமம் நடைபெற்றது. பல மாவட்டங்களில் இருந்து குடமுழுக்கு விழாவை காண மக்கள் வருகை புரிந்துள்ளனர் காலை 9.30 மணிக்கு விமானத்திற்கு குடமுழுக்கு நடந்தது. காலை 10 மணிக்கு மூலவருக்கு குடமுழுக்கு நடந்தது. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடந்தது.

    என்ன சர்ச்சையை

    என்ன சர்ச்சையை

    பெரும் சர்ச்சைகளுக்கு இடையில் இரண்டு மொழியில் குடமுழுக்கு நடக்கிறது. தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடைமுறைகள், மந்திரங்கள் ஓதப்பட்டது. கோபுரத்தில் தமிழ் மந்திரம் ஒலிக்க ஓம் நமச்சிவாய நாமம் விண்ணை முட்டியது. அதேபோல் தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டு, சம்ஸ்கிருத மந்திரங்களும் கூறப்பட்டது. இந்த தேவாரம், திருவாசகத்தை கேட்க நிறைய இடங்களில் சிறப்பு ஒலிப்பெருக்கி ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது.

    வேறு என்ன

    வேறு என்ன

    அதன்பின் சரியாக 9:21 மணிக்கு ராஜ கோபுரத்தின் உச்சியில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையில் குடமுழுக்கு நடக்கிறது. இதனால் இந்த விழா அதிக முக்கியத்துவம் பெறுகிறது. காலை 10 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பெருவுடையார் விமானமான தஞ்சை பெரிய கோபுரத்திற்கும் பின்னர் பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு நடைபெறும்.

    எத்தனை கோபுரம்

    எத்தனை கோபுரம்

    இதை பல லட்சம் மக்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர். இந்த விழாவில் இது மிகவும் முக்கியமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் 9 கோபுரங்கள் உள்ளது. இதில் ஒரு கோபுரம் ராஜ கோபுரம் ஆகும். மாலை 6 மணிக்கு பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து நிறைவாக இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.

    English summary
    Thanjavur Big temple consecration starts today morning with huge security.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X