காலைச் சுற்றிய பாம்பு! அம்மாவுடன் ‘அந்த’ பழக்கம்! இருளில் நீண்ட டாக்டர் கைகள்! கதறித் துடித்த மகள்!
தஞ்சாவூர் : தஞ்சை அருகே வேறு ஒருவரின் மனைவியோடு முறையற்ற வகையில் பழகி வந்த மருத்துவர் ஒருவர், அவரது மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த கொடுத்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் அதே வேளையில் உறவினர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்து வரும் சம்பவங்கள் பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
அதையெல்லாம் விட சிறுமிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய உறவினர்கள், சகோதரர்கள், ஏன் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவங்களும் அரங்கேறி வருவது, அதுவும் தமிழகத்தில் நடப்பது தான் வேதனையின் உச்சம். ஆனால் தாய் செய்த தவறால் அவர்களது பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றனர்.
3 வயது குழந்தை கடத்தல்.. 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்.. 'சிசிடிவியில் இளம்பெண் உருவம்’.. யார் அவர்?
அதிர்ச்சி சம்பவம்
அந்த வகையில் தஞ்சை அருகே வேறு ஒருவரின் மனைவியோடு முறையற்ற வகையில் பழகு வந்த மருத்துவர் ஒருவர், அவரது மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த கொடுத்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை கீழவாசல் ராவுத்தாம் பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் அக்குபஞ்சர் டாக்டராக இருக்கிறர். தஞ்சையில் அக்குபஞ்சர் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
கள்ளக் காதல்
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளைகள் உள்ளன. இந்த சூழ்நிலையில் இவருக்கும் தஞ்சையை சேர்ந்த ஒரு விதவை பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். அடிக்கடி அந்தப் பெண்ணின் வீட்டிற்கு பாலமுருகன் சென்று வந்தார். அந்த பெண்ணிற்கும் 18 வயதில் மகள் உள்ளார்.
பாலியல் தொல்லை
இந்த சூழ்நிலையில் கள்ளக் காதலியின் மகளான 18 வயது சிறுமிக்கு பாலமுருகன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டலும் விடுத்தார். ஒரு கட்டத்தில் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த சிறுமி நடந்த விவரங்களை தனது தாயிடம் கூறி கதறி அழுதார்.
அதிரடி கைது
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முறைதவறி வாழ்க்கைப் பாதையில் பயணிக்கும் பெண்களுக்கு இது ஒரு பாடம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.