தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பழனியில் நிலத்தகராறில் துப்பாக்கிச் சூடு- 2 பேர் படுகாயம்- அதிரவைக்கும் சிசிடிவி லைவ் காட்சிகள்!

Google Oneindia Tamil News

பழனி: பழனியில் நிலத் தகராறில் தியேட்டர் உரிமையாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடராஜன் துப்பாக்கிச் சூடு நடத்தும் சிசிடிவி காட்சிகளு வெளியாகி உள்ளன.

Recommended Video

    நிலத்தகராறில் துப்பாக்கிச் சூடு.. 2 பேர் படுகாயம்.. பழனியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - சிசிடிவி வீடியோ

    பழனி வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர் நடராஜன். அவருக்கும் பழனிச்சாமி, சுப்பிரமணி ஆகியோருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது.

    காசிமேட்டில் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட 5 பேர்..4 பேரின் உடல்கள் மீட்புகாசிமேட்டில் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட 5 பேர்..4 பேரின் உடல்கள் மீட்பு

    திடீர் துப்பாக்கிச் சூடு

    திடீர் துப்பாக்கிச் சூடு

    இது தொடர்பான வாக்குவாதத்தின் போது திடீரென தம்மிடம் இருந்து கைத்துப்பாக்கியால் நடராஜன் சுட்டார். இதில் பழனிச்சாமி, சுப்பிரமணி இருவரும் படுகாயம் அடைந்தனர். அப்போது நடராஜனை சுற்றி வளைக்க அப்பகுதியினர் முயன்றனர். ஆனால் அங்கிருந்து நடராஜன் தப்பி ஓடினார்.

    இருவர் படுகாயம்

    இருவர் படுகாயம்

    படுகாயம் அடைந்த இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது நடராஜனை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிற்து. அவரிடம் இருந்த கைத்துப்பாக்கி குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    துப்பாக்கி உரிமம்

    துப்பாக்கி உரிமம்

    இந்த விசாரணையில் நடராஜன் துப்பாக்கி உரிமம் பெற்றிருந்தார். கொரோனா லாக்டவுன் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட உரிமம் நடராஜனுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பது தெரியவந்துள்ளது. மேலும் பழனி அரசு மருத்துவமனையில் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    சிசிடிவி லைவ் காட்சி

    சிசிடிவி லைவ் காட்சி

    இதனிடையே நடராஜன் துப்பாக்கிச் சூடு நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் கைத்துப்பாக்கியால் நடராஜன் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார். ஒருவர் அப்படியே சுருண்டு தரையில் விழுகிறார். ஆத்திரம் அடைந்த மற்றொரு நபர் நடராஜனை நோக்கி கட்டையை வீசுகிறார். அங்கிருந்து நடராஜன் தப்பி ஓடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

    English summary
    Two People suffered gun shot wound in Palani, Dindigul.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X