57 வயசு பாட்டியை போய்.. அடப்பாவிங்களா.. தேனியில் ஒரு கொடுமை!
தேனியில் 57 வயது மூதாட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார்
தேனி: பொம்பளையா இருந்தா மட்டும் போதும்.. வயசெல்லாம் காமுகர்களுக்கு முக்கியமே கிடையாது.. 57 வயது பாட்டியை கூட பலாத்காரம் செய்து கொலையே விட்டார்கள் மனித மிருகங்கள்!
தேனி ஓடைத்தெருவில் வசித்து வரும் பாட்டியின் பெயர் சாந்தி. வயசு 57. அங்கே உழவர் சந்தையில் கிடைக்கிற சின்ன சின்ன வேலைகளை செய்து பிழைப்பை ஓட்டி வந்தார்.
நேற்றிரவு இவரை சில மர்ம மனிதர்கள் சுற்றி கொண்டனர். அவர்கள் யார் என்ன என்ற விவரம் தெரியவில்லை. பலாத்காரம் செய்யும்போது, சத்தம் போட்டுவிடக்கூடாது என்று பாட்டியின் வாயையும், கைகளையும் கயிற்றால் கட்டி விட்டனர்.
பின்னர், போஸ்ட்டர் ஒட்ட பயன்படுத்தும், பசையையும் முகத்தில் பூசிவிட்டு, அதன்பிறகு பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளனர். விஷயம் வெளியே தெரியக்கூடாது என்று கொலையும் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இன்று காலை உழவர் சந்தைக்கு வந்த வியாபாரிகள், பாட்டியின் சடலத்தை பார்த்ததும், உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த போலீசாரும் சடலத்தை கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது சம்பந்தமான விசாரணையை தொடங்கி உள்ளனர்.