எதுக்குண்ணே அழறீங்க.. சரி சரி இலைக்கே போடறோம்.. முகத்தை தொடைங்க முதல்ல.. ஆண்டிப்பட்டி கலகல!
ஆண்டிப்பட்டி: "அண்ணே.. ஓட்டு கேட்க வந்துட்டு எதுக்கு அழறீங்க.. சொல்லிட்டு அழுங்க.. இப்படியெல்லாம் வந்து அழக்கூடாது.. நாங்க இலைக்கே ஓட்டு போட்டுடறோம்.. நீங்க அழாதீங்க" என்று கிராம மக்கள் வேட்பாளருக்கு ஆறுதல் சொன்ன கூத்து ஆண்டிப்பட்டியில் நடந்துள்ளது!
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் சமாச்சாரத்தில் ஆரம்பத்திலிருந்தே விசேஷம் என்னவென்றால் அண்ணன்-தம்பி ஜோடி வேட்பாளர்கள்தான்! திமுக சார்பில் மகாராஜன், அதிமுக லோகிராஜன்.. இவர்கள்தான் அந்த ஒரே குடும்ப வேட்பாளர்கள்! இருவருமே உடன்பிறந்த சகோதரர்கள்! அண்ணன் மகாராஜன். தம்பி லோகிராஜன்!
இதனால் சீட் கொடுத்ததில் இருந்தே இவர்களில் யார் ஜெயிப்பார்கள் என்ற ஆர்வம், பரபரப்பு, துடிதுடிப்பு எல்லாம் தொகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மறவட்டி
இப்போது நியூஸ் தம்பி வேட்பாளர் லோகிராஜனை பற்றியதுதான்! நேற்று தேனி பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது மறவட்டி என்ற பகுதியில் ஜீப் நுழைந்தது. அவ்வளவுதான்.. லோகிராஜன் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.
குலுங்கி அழுதார்
வேட்பாளர் வந்துவிட்டார் என்று கிராமமே திரண்டு வந்து பார்த்தால், அவர் ஓட்டு கேட்காமல் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார். இதனால் கிராம மக்கள் மட்டுமல்லாமல், கூடவே ஜீப்பில் வந்த தொண்டர்களுக்கும் எதுவுமே புரியவில்லை.
அழாம சொல்லுங்க
அதனால் ஊர் மக்கள், "அண்ணே.. ஏன் அழறீங்க.. ஓட்டு கேட்க வந்துட்டு இப்படியெல்லாம் அழக்கூடாது.. என்னன்னு அழாம சொல்லுங்க.. இங்க எல்லாரும் ரெட்டை இலைதான்.. அதுக்குதான் ஓட்டு போடுவாங்க.. நீங்க அழாதீங்க" என்றார்.
அம்மா ஞாபகம்
அதன்பிறகு அழுகையை அடக்கிய வேட்பாளர் கண்களை துடைத்து கொண்டு, "ஒன்னுமில்லை.. எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்துடுச்சு.. என்னை பெத்த அம்மாவோட சொந்த ஊர் இந்த மறவட்டிதான்" என்று சொல்லவும், திரும்பவும் கதறி அழுதார். உடனே அங்கிருந்தவர்கள், அவரை ஆசுவாசப்படுத்தி, சமாதானம் செய்து ஒருவழியாக அனுப்பி வைத்தனர்.
இனிமேல் அந்த ஊருக்கு அண்ணன் மகாராஜன் வருவாரா? வந்தால் அவர் என்ன செய்ய போகிறார்? என்று கிராம மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்!