தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாலிபர் உயிருடன் எரித்துக்கொலை - தேனியில் பயங்கர சம்பவம்

தேனி அருகே வாலிபர் ஒருவர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் யார் எதற்காக கொல்லப்பட்டார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

தேனி : தேனி மாவட்டம் போடியில் சினிமா பட பாணியில் கேட்டில் கட்டி வைத்து வாலிபர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் யார் எதற்காக கொல்லப்பட்டார் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தேனி - மூணார் தேசிய நெடுஞ்சாலையில் போடிநாயக்கனூர் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அருகே இளைஞர் ஒருவர் முழுவதும் உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். அவர் அந்த கழிவு நீர் மையத்தின் கேட்டில் கட்டி வைக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.

Burned body of youth found near Theni

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்கான போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் முழுவதும் எரிந்த நிலையிலும் முகம் அடையாளம் காண முடியாதபடியும் எரிக்கப்பட்டிருந்ததால் இறந்தவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை.

டிஎஸ்பி ஈஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
Police found burned body of youth at near Theni city today moning Some unidentified persons murdered him and burnt his face the body was not unidentified.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X