ஒரே ஊர்ல.. மொத்தம் 18 பேர்.. குடும்பத்தோட ஒன்னா தாயம் விளையாடி.. எல்லோருக்கும் கொரோனா!
ஓடைப்பட்டி கிராமத்தில் 18 பேருக்கு ஒரே நாளில் தொற்று ஏற்பட்டுள்ளது
தேனி: ஒரு ஊர்ல 18 பேருக்கும் ஒரே சமயத்தில் தொற்று வந்துள்ளது.. இவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒன்றாக தாயம் விளையாடி இருக்கிறார்கள்.. இப்போது மொத்தமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இதற்கெல்லாம் காரணம் கோயம்பேடு ஹாட் ஸ்பாட்தான்!!
தேனி மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 13 பேர் தொற்று உறுதியாகி உள்ள நிலையில் அடுத்தடுத்து பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் ஒரே கிராமத்தில் மேலும் 12 பேருக்கு தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ளது ஓடைப்பட்டி என்ற கிராமம்... இங்கு வசித்து வரும் ஒரு லாரி டிரைவர் கோயம்பேட்டுக்கு வந்து போயுள்ளார். கோயம்பேடுக்கு யாரெல்லாம் வந்தார்கள் என்பதை கண்டறிந்து சோதனைகள் நடத்தப்பட்டபோது, இவரும் சிக்கினார்... இதையடுத்து, உடனடியாக டெஸ்ட் எடுக்கப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. இவருக்கு உறுதியாகவும் இவருடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்று அந்த ஆய்வு நடத்தப்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். 200 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவர்களை சோதித்ததில் 12 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 5 பேர் பெண்கள் ஆவர். மேலும் சிலர் கண்காணிப்பில் உள்ளனர்... அதனால் ஓடைப்பட்டி கிராமம் முழுதும் கலக்கம் சூழ்ந்து காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், கோயம்பேட்டுக்கு வந்து போன லாரி டிரைவர் சுற்றம், சூழ எல்லோருடனும் உட்கார்ந்து தாயம் விளையாடி இருக்கிறார்.
கொரோனா வைரஸ், எச்.ஐ.வி. மாதிரிதான்.. அழிக்கவே முடியாமல் போகலாம்.. WHO எச்சரிக்கை
Recommended Video
அதனால்தான் அந்த 12 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஓடைப்பட்டி கிராமமே அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.. அதேபோல, ஓடைப்பட்டி பகுதியில் வெளியூர் நபர்கள் நுழைவதை தடுக்க சாலைகள் தெருக்களில் முள் செடிகளை வெட்டிப்போட்டு கிராமத்தின் அடைத்து வைத்துள்ளனர். விறுவிறு பரிசோதனைகளும் நடந்து வருகின்றன!