23 வயசுதான் நிரஞ்சனாவுக்கு.. அரிவாளால் வெட்டி சாய்த்த விபரீதம்.. கணவரும் உடந்தை.. இப்போது சிறையில்!
நபரை அரிவாளால் வெட்டி சாய்த்த தம்பதி கைது செய்யப்பட்டார்
தேனி: வெறும் 23 வயசுதான் நிரஞ்சனாவுக்கு.. அரிவாளை கொண்டு ஒரு நபரை சரமாரியாக வெட்டியே சாய்த்துவிட்டார்.. இதற்கு அவரது கணவரும் உடந்தை.. இப்போது ஜோடியாக கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.
தேனி மாவட்டம் வேப்பம்பட்டியை சேர்ந்த தம்பதி பாண்டீஸ்வரன் - நிரஞ்சனா. பாண்டீஸ்வரனுக்கு 30 வயதாகிறது.. நிரஞ்சனாவுக்கு 23 வயது ஆகிறது. இருவரும் ராயப்பன்பட்டி லூர்துசாமி நகரில் ஒரு வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் மணிகண்டன் - ராஜேஸ்வரி ஆகியோருடன் இவர்களுக்கு முன்விரோதம் இருந்து வந்தது. இன்று காலை இந்த தம்பதி, இலை அறுப்பதற்காக சண்முகநதி டேம் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது மணி விடிகாலை 5.30 இருக்கும்,
அப்போது, பாண்டீஸ்வரனும் நிரஞ்சனாவும் அவர்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்... தகராறு முற்றிவிட்டது.. ஒரு கட்டத்தில், மணிகண்டனை பாண்டீஸ்வரியும் - நிரஞ்சனாவும் அரிவாளால் சரமாரியாக வெட்டியும் உள்ளனர். இதனை தடுக்க வந்த ராஜேஸ்வரியையும் வெட்டினர்.
இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் துடிதுடிக்க.. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.. தகவலறிந்து ராயப்பன்பட்டி போலீசாரும் வந்துவிட்டனர்.. உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இப்போது, ராஜேஸ்வரி முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து, பாண்டீஸ்வரன், நிரஞ்சனா தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.. 23 வயதே ஆன நிரஞ்சனாவும் அரிவாளை கொண்டு ஒரு நபரை வெட்டி சாய்த்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.