நடுரோடு.. ஃபுல் மப்பு.. பிரியாணி பொட்டலம்.. பெரிய மனுஷன் மாதிரி இருக்கீங்களே.. இப்படி செய்யலாமா!
நடுரோட்டில் போதையில் நபர்கள் சாப்பிட்டு உள்ளனர்
Recommended Video
தேனி: ஃபுல் போதை.. நடுரோடு.. ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்தை பிரித்து வைத்து கொண்டு 2 பேர் அலப்பறை செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இவர்கள் 2 பேரும் யார் என்று தெரியவில்லை. தேனி தேவதானிப்பட்டியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்கிறார்கள். எப்படியும் இவர்களுக்கு 45 வயசுக்கு மேலதான் இருக்கும்.
பட்டப்பகலிலேயே அளவுக்கு அதிகமாக தண்ணி அடித்து இருக்கிறார்கள். அப்படியே கடைக்கு போய் ஒரு பிரியாணி பொட்டலத்தையும் வாங்கி வந்து, தேனி - திண்டுக்கல் ஹைவேஸ் நடுவே உட்கார்ந்து விட்டனர்.
நெடுஞ்சாலையில் வெள்ளைக் கோடு இருக்குமே.. அங்குதான் துண்டை விரித்து எதிரெதிரே பார்த்த மாதிரி உட்கார்ந்து கொண்டனர். ரோட்டிற்கு இந்த பக்கமும் அந்த பக்கமும் பெரிய பெரிய லாரி, பஸ் போய் கொண்டிருக்கிறது.
வாங்கி வந்ததோ ஒரே ஒரு பிரியாணி பொட்டலம்தான். அதை நடுவே வைத்து கொண்டு ஆளுக்கு ஒருவராக தங்கள் பக்கம் இழுத்து கொண்டு சாப்பிடுகிறார்கள். அதுவும் கையில் அள்ளி சாப்பிட முடியாத அளவுக்கு போதை தென்படுகிறது.
பக்கத்தில் போய் கொண்டிருந்த வாகனங்களை பற்றியோ, பஸ், லாரி நம்ம மேல ஏறிவிடுமே என்ற பயமோ கொஞ்சம்கூட இவர்களிடம் காணப்படவில்லை. ஆனால் இதை பார்த்தவர்களுக்கு ஆத்திரமும், கோபமுமாக வந்தது.
இதை அந்த பக்கம் சென்றவர்கள் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். அப்படியே இந்த வீடியோவை பதிவிடாமல், விஸ்வாசம், பேட்ட போன்ற படங்களின் ஆர்.ஆர். சேர்த்து குழைத்து.. சோஷியல் மீடியாவில் போட்டுள்ளனர்.
இதை பார்த்து பொதுமக்களும் கொதிப்படைந்து உள்ளனர். நடுரோட்டில் ரகளை செய்த இவர்கள், தேவதானப்பட்டியை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தும் ஏன் இன்னும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.