பிஞ்சுல பழுத்ததை நானும் சொல்லட்டுமா.. என்கிட்ட இந்த விளையாட்டெல்லாம் கூடாது.. இளங்கோவன் எச்சரிக்கை
ஓபி ரவீந்திரநாத் பேச்சுக்கு முக ஸ்டாலின், ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளனர்
Recommended Video
தேனி: "பிஞ்சிலே பழுத்ததை பற்றி நானும் சொல்வேன்.. வெளிநாட்டு சமாச்சாரமும் எனக்கு தெரியும், சினிமா தொடர்புகளும் எனக்கு தெரியும்.. அதனால என்கிட்ட இந்த விளையாட்டெல்லாம் வேணாம்" என்று ஓபிஎஸ் மகனுக்கு திமுக கூட்டணி ஒரு அலர்ட் தந்துள்ளது.
தேனியில் துணை முதல்வர் மகன் ரவீந்திரநாத் வேட்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தனிப்பட்ட முறையில் என்ன சாதனை செய்தார், என்ன மாதிரியான களப்பணியில் ஈடுபட்டார் என்ற விவரம் எல்லாம் நமக்கு முழுதாக தெரியவில்லை. ஆனால் ஓபிஎஸ் மகன் என்ற அடையாளத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது மட்டும் பொதுவான பார்வை.
சின்ன வயசு என்று சொல்வதா.. அல்லது அரசியல் அனுபவம் இல்லை என்று சொல்வதா என தெரியவில்லை.. பிரச்சாரத்தின் போதெல்லாம் பக்குவம் இல்லாமல் தாறுமாறாக பேசி வருகிறார் ரவீந்திரநாத் என்று சொல்லப்பட்டது. அதுவும், காங்கிரஸ் தலைவரை டெபாசிட் இல்லாமல் தோற்கடிக்க செய்வேன், வெளியூர்க்காரர் என்றெல்லாம் ஈவிகேஎஸ் பற்றி பேசியிருக்கிறார் போலும்!
"பரிசுப் பெட்டி"க்காக அகமகிழும் அமமுக.. ஆஹா இது "அம்மா"வின் ஆசிர்வாதமேதான்.. விஷயம் இருக்கு!
எமோஷனல்
இதனால் திமுக - காங்கிரஸ் செம கடுப்பாகி இருக்கிறார்கள். பெரியகுளத்தில் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வந்தபோது, ரவீந்திரநாத் பேசியதற்கெல்லாம் சேர்த்து வைத்து பதிலடி தந்திருக்கிறார்கள். அதிலும் ஈவிகேஎஸ் ரொம்பவே எமோஷனல் ஆகிவிட்டாராம்.
எச்சரிக்கை
அப்போது பேசியபோது,"பிஞ்சிலே பழுத்ததை பற்றி நானும் சொல்வேன்.. ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் சமாச்சாரமும் எனக்கு தெரியும், சினிமா தொடர்புகளும் எனக்கு தெரியும்.. அதனால என்கிட்ட இந்த விளையாட்டெல்லாம் வேணாம்" என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசி இருக்கிறார்.
ஓபனாக சொல்ல முடியாது
அதேபோல திமுக தலைவர் ஸ்டாலினும், "ஓபிஎஸ் மகன் என்ற தகுதியை தவிர வேற சில மறைமுகத் தகுதிகள் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் மேடையில் ஓபனாக சொல்ல முடியாது" என்று நாகரீகமாகவும், நாசூக்காகவும் சொல்லிவிட்டு போனாராம்!
கடிவாளம்
இப்படி கூட்டணி கட்சி தலைவர்கள் ரவீந்திரநாத் பற்றி பேசிவிட்டு போனதற்கு தேனி அதிமுக தரப்பு ஆடிப்போய் விட்டதாம்! "கெத்தாக வலம் வரும் மகனுக்கு அரசியல் நாகரீகம் சொல்லி கொடுத்து இருக்க வேண்டும்.. பொது இடங்களில் எப்படி பேசுவது என்றும் கடிவாளம் இட்டிருந்தால் இப்படி உள்ளூரிலேயே அசிங்கப்பட்டிருக்க தேவையில்லை" என்று அதிமுகவின் ஒரு தரப்பே முணுமுணுக்கிறதாம்!
பாடம் எடுக்கணும்
இதேபோலத்தான் விஜயகாந்த் மகனும் தாறுமாறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். மகன்களை உட்கார வைத்து அப்பாக்கள் பாடம் எடுத்தால் நல்லதுதான்.