மாணவர்களுக்கு 500 முகக் கவசங்கள்.. முன்னாள் மாணவர்கள் அசத்தல்.. தேனி பள்ளியில் நெகிழ்ச்சி
தேனி: பள்ளி மாணவர்களுக்கு 500 முகக் கவசங்கள் வழங்கி அசத்தியுள்ளனர், முன்னாள் மாணவர்கள். இந்த முன்னுதாரண சம்பவம் தேனியில் நடந்துள்ளது.
தேனி, மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில், கடந்த 1986ம் வருடம் படித்த பழைய மாணவர்கள் கொரானா நோய்தொற்று தடுக்கும் பணியில் ஒரு பகுதியாக அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 500 முகக் கவசங்கள் வழங்கியுள்ளனர்.
இதை பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரனிடம் வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் 1986ம் வருடம் பயின்று முடித்த மாணவர்களான துரைவேலன், மதிவாணன் மற்றும் பழைய மாணவர்கள் தற்போது அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மூலம் முக கவசங்களை வழங்கினர்.
படித்த பள்ளியை மறக்காமல், இப்போதுள்ள சந்ததிகள் பலன் பெற பழைய மாணவர்கள், இணைந்து செய்துள்ள இந்த சேவை அனைவராலும் பாராட்டப்படுகிறது.
சென்னை வெற்றியை தொடர்ந்து.. கோவையிலும் இன்று முதல் கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை