மேகதாது அணை கட்ட எனது மகன் மணல் சப்ளையா? ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் பதில்
தேனி: மேகதாது அணை கட்டுமானத்திற்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் மணல் சப்ளை செய்வதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறி வரும் குற்றச்சாட்டுக்கு, பன்னீர் செல்வம் இன்று பதில் தெரிவித்தார்.
தேனியில் இன்று மதியம் ஓ.பன்னீர் செல்வம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் பிரச்சாரத்தில், எதிர்க்கட்சி தலைவர்கள் பொய் குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள். தி வீக் இதழ் செய்தியை சுட்டிக் காட்டி ஸ்டாலின் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ராகுல் சொல்வது சரிதான்.. மோடி "திருடன்தான்".. அதிமுக பிரசாரத்தில் சரத்குமார் பரபரப்பு பேச்சு
காவிரி விவகாரத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வரலாற்று தவறு செய்தது. காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்தது ஜெயலலிதா. தனது வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணம் என்பது, காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று அரசிதழில் வெளியிடப்பட்ட நாள்தான் என்று, ஜெயலலிதா நெகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.
மேகதாது அணை கட்ட எனது மகன் மணல் சப்ளை செய்வதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். அதேபோல, இளங்கோவன் மற்றும் ஸ்டாலின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.