நோய் தாக்குதலின் பிடியில் அழுகும் வெங்காயம்- நிவாரணம் கோரும் விவசாயிகள்
தேனி: நோய் தாக்குதலால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி, குள்ளப்புரம், வைகை புதூர் உள்ளிட்ட பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பயிரிட்டுள்ளனர். பயிரிடப்பட்டு 60 நாட்களில் இந்த வெங்காயத்தில் மகசூல் எடுக்கப்படும்.
தற்பொழுது 40 நாட்கள் ஆன நிலையில் வெங்காய பயிரில் நோய் தாக்குதல் ஏற்பட்டு பயிர்கள் காய்ந்து வருகின்றன. இந்த நோய் தாக்குதலால் வெங்காயம் அனைத்தும் கருகி அழுகி வருவதால் ஏக்கருக்கு 80ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது.
அறுவடைக்கு 20 நாட்களே உள்ள நிலையில் வெங்காய பயிர்கள் அழிந்து வருவதால் விவசாயிகள் நடவு செய்த செலவு தொகையை கூட எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். ஆகையால் வெங்காய விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெ. அன்பழகன்.. நிறைய பாடங்கள்.. படிப்பினைகள்.. கவனம் தேவை தலைவர்களே.. மக்களுக்கு நீங்கள் முக்கியம்